ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதில் உள்ள ஒரே ஒரு சிக்கல் பையனுடையதோ அல்லது பொண்ணுடையதோ செவ்வாய் தோஷ சாதகமாக அமைந்துவிட்டால் அந்த பெற்றோர்கள் படும் வருத்தம் அளவிடற்கரியது. இஃது எதனால் என்றால் நல்ல வரனாக அமைந்துவிட்டால் அதற்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டுமே என்ற தீராத கவலைதான் என்றால் அஃது மிகையாகது. ஆனால் நாம் நினைப்பது போல செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பையனும் பொன்னும் திருமணம் செய்துகொண்டால் அது அவர்களுடைய ஆயுளை பாதிக்காது. பிறகு எதற்க்காக இதை ஏற்படுத்தினார்கள், என்பது மிகுந்த ஆய்விற்கு உரியது. தற்காலத்தில் ரத்தத்தை பல பிரிவுகளாக பிரித்தறிந்துள்ளனர் ஒரு குறிப்பிட்ட ரத்த வகையானது குழந்தைக்கு இருந்துவிட்டால் அதன் பின்னர் தாயிக்கு மீண்டும் கற்பம் தரிக்காது என்பதால் ஒரே குழந்தையுடன் அவர்களுடைய வாரிசு நின்றுவிடும் என்பதை தற்காலத்தில் உள்ள மருத்துவ முறையானது ஒப்புக்கொண்டுள்ளது இதற்காகவே பிரசவம் ஆன சில மணி நேரத்தில் அந்த தாயிக்கு சிறப்பு சிகிச்சையாக ஒரு மருந்தை ஊசி மூலம் செலுதுகின்றர்கள் என்பதை பலரும் அறிவர். ஆனால் முற்காலத்தில் இந்த வசதிகள் இல்லை எனவே ஒத்துப்போகும் ரத்த வகையை கண்டு பிடிப்பதற்கு இந்த செவ்வாய் தோசம் என்பது துணை நின்றது என்றால் அது மிகையல்ல. ஆகவே தான் செவ்வாய் தோஷம் உள்ள வரனுக்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள வரனையே திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்தி கூறியது. இந்த செவ்வாய் தோஷம் என்பதை நம் மக்கள் ஒரு தீண்டத்தகாத பொருளாகவே பார்த்து வருகின்றனர். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்பதற்கு ஆளுக்கு ஒரு விதிமுறையை வைத்துக்கொண்டு பார்த்துவருகின்றனர். இது பற்றிய ஒரு விளக்கத்தினை பின்வரும் ஒளி காட்சி இணைப்பானது வாசகர்களுக்கு தெளிவாக வலியுறுத்தும்.
Chevai Dhosam Video Explanation.
No comments:
Post a Comment