Tuesday 28 December 2010

செவ்வாய் தோஷம்

          ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதில் உள்ள ஒரே ஒரு சிக்கல் பையனுடையதோ அல்லது பொண்ணுடையதோ செவ்வாய் தோஷ சாதகமாக அமைந்துவிட்டால் அந்த பெற்றோர்கள் படும் வருத்தம் அளவிடற்கரியது. இஃது எதனால் என்றால் நல்ல வரனாக அமைந்துவிட்டால் அதற்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டுமே என்ற தீராத கவலைதான் என்றால் அஃது மிகையாகது. ஆனால் நாம் நினைப்பது போல செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பையனும் பொன்னும் திருமணம் செய்துகொண்டால் அது அவர்களுடைய ஆயுளை பாதிக்காது. பிறகு எதற்க்காக இதை ஏற்படுத்தினார்கள், என்பது மிகுந்த ஆய்விற்கு உரியது.  தற்காலத்தில் ரத்தத்தை பல பிரிவுகளாக பிரித்தறிந்துள்ளனர் ஒரு குறிப்பிட்ட ரத்த வகையானது குழந்தைக்கு இருந்துவிட்டால் அதன் பின்னர் தாயிக்கு மீண்டும் கற்பம் தரிக்காது என்பதால் ஒரே குழந்தையுடன் அவர்களுடைய வாரிசு நின்றுவிடும் என்பதை தற்காலத்தில் உள்ள மருத்துவ முறையானது ஒப்புக்கொண்டுள்ளது இதற்காகவே பிரசவம் ஆன சில மணி நேரத்தில் அந்த தாயிக்கு சிறப்பு சிகிச்சையாக ஒரு மருந்தை ஊசி மூலம் செலுதுகின்றர்கள் என்பதை பலரும் அறிவர். ஆனால் முற்காலத்தில் இந்த வசதிகள் இல்லை எனவே ஒத்துப்போகும் ரத்த வகையை கண்டு பிடிப்பதற்கு இந்த செவ்வாய் தோசம் என்பது துணை நின்றது  என்றால் அது மிகையல்ல.  ஆகவே தான் செவ்வாய் தோஷம் உள்ள வரனுக்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள வரனையே திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்தி கூறியது. இந்த செவ்வாய் தோஷம் என்பதை நம் மக்கள் ஒரு தீண்டத்தகாத பொருளாகவே பார்த்து வருகின்றனர். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்பதற்கு ஆளுக்கு ஒரு விதிமுறையை வைத்துக்கொண்டு பார்த்துவருகின்றனர். இது பற்றிய ஒரு விளக்கத்தினை பின்வரும் ஒளி காட்சி இணைப்பானது வாசகர்களுக்கு தெளிவாக வலியுறுத்தும்.


                                                       Chevai Dhosam Video Explanation.

Monday 27 December 2010

திருமண பொருத்தம்

      பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டுமா ? பொருத்தம் பார்த்து


 திருமணம் செய்த எல்லாருமே நன்றாகத்தான் உள்ளார்களா ? ஜாதகம் ஜோதிடம் 


போன்றவற்றை பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் சிறப்பாக இல்லையா ? காதல் 


திருமணம் செய்பவர்கள் நன்றாக இல்லையா என்பதெல்லாம் எல்லோருடைய மனதிலும் 


எழும் கேள்வியாகும். திருமண பொருத்தம் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? 


என்பதைப்பற்றி விளக்குவதே இந்த பதிவின் நோக்கமாகும்.





                                         

      நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடது புறமாகவே செல்லவேண்டும் என்பது பல நாடுகளில் உள்ள ஒரு சாலை விதியாகும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஏன் வலது புறமாக சென்றால் நாம் நம்முடைய இடத்திற்கு செல்ல முடியாதா என்றால் முடியும். ஆனால் ஆபத்து என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். இடது புறம் செல்வது என்பது வலது பக்கம் செல்வதைவிட பாதுகாப்பானதாகும் இதில் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த பாதுகாப்பு என்பதை ஜோதிட ரீதியாக கண்டு சொல்வதே பொருத்தமாகும். இதன் மூலம் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக எடுத்து காட்டியுள்ளனர்.

                      அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது - அதிலும்,
                      கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதனினும்  அரிது 
                                                        ________________ ஒவ்வையார் ______________

என்ற மூதுரைக்குஏற்ப, வாழும் வளமான வாழ்க்கையை மேலும் செம்மையாக அமைத்துக்கொள்வது ஜோதிடத்தின் துணை கொண்டு மிக எளிதானதே. தனிப்பட்ட ஒரு மனிதனை பார்க்காமலே அவனுடைய பிறப்பு வளர்ப்பு கல்வி குணநலன்கள் போன்றவற்றை அவனுடைய ஜாதகத்தை வைத்தே பலன் சொல்வது என்பது உலகில் உள்ள எந்த அறிவியல் விற்பன்னாராலும் முடியாத ஒன்றாகும். ஆனால் நம்மவர்கள் கெப்ளரும், கலிலியோவும் சொன்னால் ஏற்றுக்கொண்டு அதையும் பாடமாக படிப்பார்கள்,  நமது சித்தர்களும், முனிவர்களும் பன்னேடுன்காலத்திர்க்கு முன்னரே எந்தவிதமான அறிவியல் சாதனங்களும் இல்லாமல், தங்களுடைய தவத்தினால் கண்கொண்டு அறிந்தவற்றை நமக்கு பரிபாடல் வழியாக சொல்லிச்சென்றதை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அதை கண்டு உணர்தவர்களை மதிப்பதும் இல்லை. இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் மற்றவர்கள் சொன்னதைப்போல் இல்லாமல் நம் நாட்டு அறிஞர்கள் பரிபாஷைஆக சொல்லிச்சென்றுள்ளனர். இதன் காரணம் தகுதியனவர்களுக்கு மட்டுமே புரியவேண்டும் என்பதாலேயாகும். முதன் முதலாக பூமி முதலான கோள்கள் அனைத்துமே சூரியனை சுற்றி வருகின்றன என்று அறிவித்து கல்லடி வாங்கி விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அறிவியல் அறிஞன் சொல்வதற்கு முன்பே நமவர்கள் கோள்கள் சூரியன் மட்டுமல்ல ராகு கேது என்ற இரண்டு நிழல்களையும் கண்டுபிடித்து அவைகளுக்கும் பெயர் வைத்து அவைகளுடைய சஞ்சாரங்களையும், சலனங்களையும் நிமிடக்கனக்கு உள்ளபட எடுத்து சொல்லிவிட்டார்கள். இவைகளை பற்றி நாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். தற்போது திருமண பொருத்தம் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை பார்க்கலாம். கீழே உள்ள திருமண பொருத்தம் என்பதை கிளிக் பண்னவும். ஒளிக்கட்சியாக உங்கள் கண் முன்னே திருமண பொருத்தம் விரியும்.


                                                             Marriage Matching 

                                                 


           
                   

திருமண பொருத்தம்

      பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டுமா ? பொருத்தம் பார்த்து திருமணம் செய்த எல்லாருமே நன்றாகத்தான் உள்ளார்களா ? ஜாதகம் ஜோதிடம் போன்றவற்றை பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் சிறப்பாக இல்லையா ? காதல் திருமணம் செய்பவர்கள் நன்றாக இல்லையா என்பதெல்லாம் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வியாகும். திருமண பொருத்தம் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? என்பதைப்பற்றி விளக்குவதே இந்த பதிவின் நோக்கமாகும்.

                                         

      நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடது புறமாகவே செல்லவேண்டும் என்பது பல நாடுகளில் உள்ள ஒரு சாலை விதியாகும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஏன் வலது புறமாக சென்றால் நாம் நம்முடைய இடத்திற்கு செல்ல முடியாதா என்றால் முடியும். ஆனால் ஆபத்து என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். இடது புறம் செல்வது என்பது வலது பக்கம் செல்வதைவிட பாதுகாப்பானதாகும் இதில் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த பாதுகாப்பு என்பதை ஜோதிட ரீதியாக கண்டு சொல்வதே பொருத்தமாகும். இதன் மூலம் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக எடுத்து காட்டியுள்ளனர்.

                      அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது - அதிலும்,
                      கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதனினும்  அரிது 
                                                        ________________ ஒவ்வையார் ______________

என்ற மூதுரைக்குஏற்ப, வாழும் வளமான வாழ்க்கையை மேலும் செம்மையாக அமைத்துக்கொள்வது ஜோதிடத்தின் துணை கொண்டு மிக எளிதானதே. தனிப்பட்ட ஒரு மனிதனை பார்க்காமலே அவனுடைய பிறப்பு வளர்ப்பு கல்வி குணநலன்கள் போன்றவற்றை அவனுடைய ஜாதகத்தை வைத்தே பலன் சொல்வது என்பது உலகில் உள்ள எந்த அறிவியல் விற்பன்னாராலும் முடியாத ஒன்றாகும். ஆனால் நம்மவர்கள் கெப்ளரும், கலிலியோவும் சொன்னால் ஏற்றுக்கொண்டு அதையும் பாடமாக படிப்பார்கள்,  நமது சித்தர்களும், முனிவர்களும் பன்னேடுன்காலத்திர்க்கு முன்னரே எந்தவிதமான அறிவியல் சாதனங்களும் இல்லாமல், தங்களுடைய தவத்தினால் கண்கொண்டு அறிந்தவற்றை நமக்கு பரிபாடல் வழியாக சொல்லிச்சென்றதை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அதை கண்டு உணர்தவர்களை மதிப்பதும் இல்லை. இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் மற்றவர்கள் சொன்னதைப்போல் இல்லாமல் நம் நாட்டு அறிஞர்கள் பரிபாஷைஆக சொல்லிச்சென்றுள்ளனர். இதன் காரணம் தகுதியனவர்களுக்கு மட்டுமே புரியவேண்டும் என்பதாலேயாகும். முதன் முதலாக பூமி முதலான கோள்கள் அனைத்துமே சூரியனை சுற்றி வருகின்றன என்று அறிவித்து கல்லடி வாங்கி விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அறிவியல் அறிஞன் சொல்வதற்கு முன்பே நமவர்கள் கோள்கள் சூரியன் மட்டுமல்ல ராகு கேது என்ற இரண்டு நிழல்களையும் கண்டுபிடித்து அவைகளுக்கும் பெயர் வைத்து அவைகளுடைய சஞ்சாரங்களையும், சலனங்களையும் நிமிடக்கனக்கு உள்ளபட எடுத்து சொல்லிவிட்டார்கள். இவைகளை பற்றி நாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். தற்போது திருமண பொருத்தம் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை பார்க்கலாம். கீழே உள்ள திருமண பொருத்தம் என்பதை கிளிக் பண்னவும். ஒளிக்கட்சியாக உங்கள் கண் முன்னே திருமண பொருத்தம் விரியும்.

                                                 


           
                   

பாரம்பரிய ஜோதிடம்


இந்திய ஜோதிட முறையானது மிக தொன்மையானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒருவருடைய ஜனன ஜாதகத்தை வைத்து அவருடைய எதிர்காலத்தை எந்த அளவு கூறமுடியும் என்பதற்கு தமிழ் பாரம்பரிய ஜோதிட முறையானது பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான அளவுகோலினை தீட்டியுள்ளது. இந்த ஜோதிடம் வானியல், காலநிலை, கால கணக்கீடுகள் போன்றவற்றை உள்ளடக்கியது. பண்நெடுங்காலத்திற்கு முன்னரே நமது முன்னோர்கள் அறிவியலில் மிக உன்னதமான நிலையில் இருந்ததை இந்த ஜோதிட முறை மூலமாக நாம் உள்ளங்கை நெல்லிக்கனியென தெரிந்துகொள்வது வெள்ளிடையாகும். 

     இந்திய ஜோதிட முறைகளில் காணப்படும் ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், மற்றும் இருபத்தேழுநட்சத்திரங்கள் ஆகிய அனைத்துமே உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் காணப்படும் பொதுவான, மாறுபாடில்லாத ஒரு பால பாடமாகும். 

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றோரெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் வார். 

                                     ______ திருவள்ளுவர் __________

என்ற பொய்யாமொழி புலவர் வாக்கின்படி நாம் கொண்டுள்ள ஜோதிட முறைகளையே உலகில்லுலோர் அனைவரும் பின்பற்றுகின்றார்கள் என்றால் அது மிகையாகது. அதனால் தான் நாம் ஜோதிடம் ஜாதகம் பிறந்த குறிப்பு போன்ற இவைகளையும் கடந்து, அஷ்டமங்கள பிரசன்னம், தேவ பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், சாமக்கோள் ஆருடம், நிமித்தம், பிரசன்ன நிச்சயம், முகூர்த்த நிச்சயம், போன்ற பல படிகளை கடந்து நிற்கின்றோம். ஆனால் ஏனையோர் அனைவருமே நம்முடைய தொடக்க நிலையிலேயே இன்னமும் நிற்கின்றார்கள், என்பதே உலகியல் உண்மையாகும்.

தமிழ் பாரம்பரிய ஜோதிட முறைகளை உங்களின் மேலான பார்வைக்கு வைப்பது:

திண்டுக்கல் ப.சின்னராஜ் ஜோதிடர்.

தொடர்புக்கு:    a9842108500@gmail.com           Skype Id: astrochinnaraj    Cell: 9842108500  (INDIA)


DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER VIDEO 001